Brain aneurysm எனப்படும் மூளை ரத்த நாள கோளாறு – தலைவலிக்கான சிகிச்சைகள்
Brain aneurysmஎனப்படும் ரத்த நாள கோளாறு
மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கம் Brain aneurysm எனப்படும் மூளை ரத்த நாள கோளாறு எனப்படுகிறது.சில நேரங்களில் தண்டில் தொங்கும் பெர்ரி பழங்களைப்போல் இருக்கும்.இவை சிதையலாம் அல்லது இவற்றில் இருந்து கசிவு ஏற்படலாம்.மூளைக்கும், மூளையை மூடியிருக்கும், திசுவிற்கும் இடையே இவை சிதைவடைந்து காணப்படுவது பொதுவான ஒன்றாகும்.இந்த வகை ரத்தக்கசிவினால் ஏற்படும் பக்கவாதம் சப்அரக்னாய்ட் ஹெமோர்ஹேஜ் எனப்படும்.சிதைந்த ரத்த நாளம் திடீரென வீங்கி வாழ்க்கைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம்.இந்த நிலை ஏற்படும்போது தேவையான மருத்துவ சிகிச்சைகள் அவசியமாகின்றன.பெரும்பாலான மூளை ரத்த நாள கோளாறுகள் சிதையாது.அவை ஏதேனும் உடல்நலக் குறைபாட்டை மட்டுமே ஏற்படுத்தும்.அவற்றை பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.சில நேரங்களில் இவற்றிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு, எதிர்காலத்தில் அவை, மீண்டும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.உங்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளை மருத்துவரிடம் பேசி தெரிந்துகொள்வது சிறந்தது.
Brain aneurysm எனப்படும் ரத்த நாள கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.மூளை ரத்த நாள கோளாறு மெல்லிய தமனி சுவர்களில் உருவாகும்.பொதுவாக அவை தமனிகளின் கிளைகளில் அவை உருவாகும்.ஏனெனில் அவைதான் பலவீனமான பகுதியாகும்.மேலும் அவை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.மூளையின் அடிப்பகுதியிலும் அவை பொதுவாக உருவாகும்.எதுவாக இருந்தாலும் அது ஆபத்துதான்.
ஆபத்துக்காரணி என்னென்ன?
இது குழந்தைகளைவிட பெரியவர்களுக்கே பொதுவாக ஏற்படும்.ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் ஏற்படும்.சில ஆபத்து காரணிகள் மட்டும் இடையில் ஏற்படும், மற்ற அனைத்தும் பிறக்கும்போதே இருந்திருக்கும். இடையில் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
ரத்தத்தொற்று அல்லது தலையில் அடிபடுவதாலும் சில வகையான மூளை ரத்த நாள கோளாறுகள் ஏற்படுகின்றன.
பிறக்கும்போதே ஏற்படும் ஆபத்துக்கான காரணிகள்:
இந்த கோளாறின் அறிகுறிகள் என்னென்ன?
நோயின் தீவிரம் எந்த நிலையில் உள்ளதோ அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும்.
சிதைந்த மூளை ரத்த நாள கோளாறு
முக்கிய அறிகுறி திடீரென ஏற்படும் கடுமையான தலைவலி.இது மோசமான தலைவலி என்று அழைக்கப்படுகிறது. சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
மூளை ரத்த நாள கசிவு
சில நேரங்களில், மூளை ரத்த நாளங்களில் இருந்து குறிப்பிட்ட அளவிலான ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்பாகும்.இந்த கசிவு அல்லது ரத்தப்போக்கே கடுமையான தலைவலிக்கு காரணமாகும்.கடுமையான சிதைவும் கூட தலைவலியை ஏற்படுத்தும்.
பாதிப்பை ஏற்படுத்தாத மூளை ரத்த நாள கோளாறுகள்
சிதையாத அல்லது சிறிய மூளை ரத்த நாளங்கள் கோளாறுகள் எந்த அறிகுறியையும் காட்டாது.எனினும் பெரியவை, மூளை நரம்புகள் மற்றும் திசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து, பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
கடுமையான தலைவலி ஏற்படும்போது, உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்