பார்க்கின்சன்ஸ் நோய்கள் சிகிச்சை ( Parkison diseases)
பார்க்கின்சன்ஸ் நோய்கள் என்றால் என்ன?
மூட்டு அல்லது கைகள் அல்லது விரல்களில் நடுக்கம் ஏற்படுவது.கைகள் வேலை செய்யாமல் ஓய்வில்இருக்கும்போதும், நடுக்கம் ஏற்படும்.மனிதர்களுக்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி கோளாறால் பார்க்கின்சன்ஸ் நோய்கள் தோன்றி, ஒருவரின் கைகளின் இயக்கத்தையே பாதிக்கும்.முதலில் ஒரு கையில் சிறிய நடுக்கத்துடன் துவங்குவதே இதன் ஆரம்ப அறிகுறியாகும்.பின்னர் மெல்ல மெல்ல அதிகரித்து கைகளில் விறைப்பு தன்மையை ஏற்படுத்தி, இறுதியில், இயக்கத்தை மெதுவாக குறைத்துவிடும்.மிக முக்கியமாக, நோயின் ஆரம்ப காலத்தில், இது எவ்வித அறிகுறியையும் காட்டாது.ஆனால் நிலை மிக மோசமடைந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரித்து, இயக்குவது மற்றும் பேச்சில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
அடையாளத்திற்கான முக்கிய அறிகுறிகள்
பார்க்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.பொதுவாகவே ஆரம்ப அறிகுறிகள் கவனிக்கப்படாமலே போய்விடும்.அறிகுறிகள் முதலில் உடலின் ஒருபுறத்தில் ஏற்படும்.இருபுறங்களும் பாதிக்கப்பட்ட பின்னரும் முதலில் ஏற்பட்ட ஒரு பக்கத்தின் நிலை மேலும் மோசமடையும்.பின்வருபவை பார்க்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகளாகும்.
பார்க்கின்சன்ஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஒருவரின் உடலில் தொடர்ந்து வரும் இந்த கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம்.ஏனெனில் அதுவே சிகிச்சை முறையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மூளையின் நரம்பு செல்கள் அல்லது நியூரான்கள் படிப்படியாக சிதைந்து அதன் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை இழப்பதால் ஏற்படுகிறது.பார்க்கின்சன்ஸ் கோளாறின் முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
நாங்கள் வழங்கும் சிகிச்சைகள்
பார்க்கின்சன்ஸ் கோளாறை முற்றிலும் குணமாக்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.எனவே அறிகுறிகளின் அடிப்படையில், நோயாளிகள் அதை கையாள்வதற்கு தேவையான சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம்.எங்களின் திறமையான மருத்துவ நிபுணர்கள் குழு பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிறப்பாக கவனித்து, அவர்களுக்கு உதவுவார்கள்.நாங்கள் நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப சில மருந்துகளை பரிந்துரைக்கிறோம்.அதன் மூலம் அவர்கள் சூழ்நிலையை சமாளிக்க முடியும்.தீவிரமான நிலையில் எங்கள் மருத்துவர்கள், அறுவைசிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.அது குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு உதவும்.உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த இயக்கங்களை கொடுப்பதன் மூலம் நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம்.அது நோயாளிகளை நல்ல நிலையை அடைய உதவும்.
இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்
இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்